Saturday : March 15, 2025
01 : 35 : 43 AM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

வீடு முற்றுகைக்கு 300 பேர் கூட வரலையே என கிண்டலடித்த சீமான்- 870 பெரியாரிஸ்டுகள் மீது போலீஸ் வழக்கு!!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

சென்னை: தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சென்னை நீலாங்கரை வீட்டை முற்றுகையிட முயன்றதாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் 870 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட அமைப்பினரால் 300 பேரை கூட அழைத்துவர முடியவில்லையே என ஏற்கனவே சீமான் விமர்சனம் செய்திருந்த நிலையில் போலீசார் 870 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தந்தை பெரியார் தமிழருக்கு எதிரி; தமிழ் மொழியை இழிவுபடுத்தியவர்; தகாத உறவுகளை ஒப்புக் கொண்டவர்; கர்ப்பப்பையை அறுத்தெறியச் சொன்னவர் என இடைவிடாமல் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தந்தை பெரியாரை திடீரென சீமான் இழிவாகப் பேசியிருப்பது பெரியாரிய உணர்வாளர்களை மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சி அடையச் செய்து கடும் கண்டனங்களை தெரிவிக்கச் செய்தது.

மேலும் தந்தை பெரியார் கூறியதாக சீமான் பேசிவரும் கருத்துகளுக்கு ஆதாரங்களையும் பெரியாரிய உணர்வாளர்கள் கேட்டனர். ஆனால் சீமான் ஆதாரங்கள் தரவில்லை. இதனால் 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய, தமிழ்த் தேசிய இயக்கங்கள் இணைந்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடுவதாக அறிவித்தனர். இதனால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தந்தை பெரியார் கூறியதாக சீமான் பேசிவரும் கருத்துகளுக்கு ஆதாரங்களையும் பெரியாரிய உணர்வாளர்கள் கேட்டனர். ஆனால் சீமான் ஆதாரங்கள் தரவில்லை. இதனால் 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய, தமிழ்த் தேசிய இயக்கங்கள் இணைந்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடுவதாக அறிவித்தனர். இதனால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.


https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *