Saturday : March 15, 2025
01 : 45 : 36 AM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

மகாத்மா காந்தி நினைவு நாளை மத நல்லிணக்க நாளாக கொண்டாட வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என வலியுறுத்தும் வகையில் காந்தி நினைவு நாளில் மத நல்லிணக்க உறுதிமொழியை ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் மு..ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

 

இந்தியா முழுமைக்குமான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற அண்ணல் காந்தியின் புகழைச் சிதைப்பதன் மூலமாக இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க முயற்சிக்கிறார்கள்.'காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை' என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான்.அண்ணல் காந்தி அடிகளின் பிறந்தநாளை 'சுவச்ச பாரத் அபியான்' என மாற்றியதில் இருக்கிறது இவர்களது அழித்தல் வேலைகள். இது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதே போன்ற காரியத்தைத்தான் அக்டோபர் 2-ஆம் நாள் ஊர்வலம் நடத்துவதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு திசைதிருப்பப் பார்த்தது. அதை தமிழ்நாடு அரசு தடுத்தது!

 

மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்"இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *